உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

‘கத்தியால் குத்தி ஒருவர் கொலை’

பூகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்டாவில பிரதேசத்தில் ஏற்பட்ட வாய்தர்க்கத்தின் காரணமாக ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

தாக்குதலில் பலத்த காயமடைந்த நபர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

கத்தியால் குத்தியதன் காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார்.

50 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளதுடன் பூகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க