உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

கோதபயவின் இல்லத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு…

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதபய ராஜபக்ஷ தமிழ் மக்களின் ஆதரவோடு ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற விரும்புகிறேன், என்று கூறியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

கோதபய ராஜபக்ஷ இல்லத்தில் நடந்த கலந்துரையாடலிலே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அவர் ஆர்வமாகவுள்ளதாகவும் தமிழ் மக்களுக்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகவும் கோதபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மற்ற உறுப்பினர்கள் என்னுடன் கலந்துரையாடுவார் என்று நம்புகிறேன் என்று கோட்டபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் விரைவில் அபிவிருத்திச் செய்ய இருக்கின்றேன் என்றும், போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் பொருளாதார நிலைமைகள் மேம்படுத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க தாம் தலையிடுவதாகவும், நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதே தனது நோக்கம் என்றும் கோட்டபய ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளார்.

கருத்து தெரிவிக்க