உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

‘சு.கவின் 15 உறுப்பினர்கள் தாமரை மொட்டு மாநாட்டில் பங்கேற்பர்’

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாநாட்டில் 15 சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்பார்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

ஆகஸ்ட் 11 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுஜன பெரமுனவின் மாநாட்டில் சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்கக்கூடாது என நேற்றிரவு நடைபெற்ற அக்கட்சியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே சு.கவின் பொருளாளர் பதவியை வகிக்கும் எஸ்.பி. திஸாநாயக்க,

” நான் உட்பட சுதந்திரக்கட்சியின் 15 உறுப்பினர்கள் நிச்சயம் மேடையேறுவோம். இதை எவரும் தடுக்க முடியாது. ” என்று குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க