உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

இரண்டு மாதிரிக் கிராமங்கள் இன்று மக்களிடம் கையளிப்பு

29 வீடுகளைக் கொண்ட அம்பன்பொல – வந்துருஸ்ஸவில் அமைக்கப்பட்டுள்ள சந்துன்கினிகம கிராமம் இன்று மக்களிடம் கையளிக்கப்படவுள்ளன.

இந் நிகழ்வுகள் வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாஸ தலைமையில் இடம்பெறவுள்ளன.

அனைவருக்கும் நிழல் வேலைத்திட்டத்தின் ஊடான குருநாகல் மாட்டத்தில் குறித்த இரண்டு மாதிரிக் கிராமங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, 25 வீடுகளைக்கொண்ட எஹெட்டுவெளவில் அமைக்கப்பட்டுள்ள ரஜமித்துருகம கிராமம் முற்பகல் 11.00 மணிக்கு பொதுமக்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

கருத்து தெரிவிக்க