உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

காட்டு யானை தாக்கி வனவிலங்கு அதிகாரி ஒருவர் உயிரிழப்பு

காயமடைந்த யானைக்கு சிகிச்சையளிக்கச் சென்ற வனவிலங்கு அதிகாரி ஒருவர் காட்டு யானையால் தாக்கப்பட்டு உயிரிழந்துள் ளார்.

நேற்று மாலை 5 மணியளவில் மஹவவில் உள்ள ஒரு காட்பகுதியில் இந்த தாக்குதல் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காட்டு யானை தாக்குதலில் காயமடைந்த வனவிலங்கு அதிகாரி மஹவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்துள்ளார்.

நிக்கவெரட்டிய வனவிலங்கு கால்நடை பிரிவின் வனவிலங்கு காவலர் 37 வயது பி.எம்.எஸ் பஸ்நாயக்க என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த வனவிலங்கு அதிகாரியின் பிரேதம் பிணச்சாவடியில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மஹவ போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க