உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

‘வவுனியாவில் கரடியின் தாக்குதலுக்குள்ளாகிய சகோதரர்கள்’

சன்னாசிபரந்தன் காட்டுப்பகுதியில் இன்று  கரடியின் தாக்குதலுக்குள்ளாகி அண்ணன்,தம்பி இருவரும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா சன்னாசிபரந்தன்  பகுதியில்  நேற்று (06.08)  மாலை 3.00மணியளவில் மாடு மேய்ப்பதற்காக சகோதரர்கள் இருவருமாக  காட்டுப்பகுதிக்கு  சென்றுள்ளனர்.

இதன் போது  மாலை 3.30 மணியளவில் கரடியின் தாக்குதலுக்குள்ளாகி இராசதுரை விமலநாதன் 37 ,இராசதுரை யசோர் 25,வயதுடைய இருவரும்  வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா வைத்தியசாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க