உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

ரணில், சஜித் அலரிமாளிகையில் இரகசிய சந்திப்பு!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்குமிடையில் நேற்றிரவு (06) இரகசிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக அரசியல் தரப்புகளிலிருந்து அறியமுடிகின்றது.

அலரிமாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பில் இவர்கள் இருவரையும்தவிர வேறு எவரும் பங்கேற்கவில்லை என்றும், ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலேயே விரிவாக ஆராயப்பட்டுள்ளன என்றும் மேற்படி தரப்புகளிலிருந்து தெரியவருகின்றது.

21/4 தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திவரும் விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று மாலை சாட்சியமளித்தார்.

இதன்பின்னரே அலரிமாளிகை சென்று சஜித்தை சந்தித்துள்ளார். இதன்போது இருவரும் மனம்விட்டு பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.

கருத்து தெரிவிக்க