உள்நாட்டு செய்திகள்புதியவை

தாக்குதலுக்கு வெடிபொருட்கள் வழங்கியோருக்கு விளக்கமறியல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்ட குண்டுவெடிப்பாளர்களுக்கு வெடிபொருட்களை வழங்கியதாக கைது செய்யப்பட்ட மூவரையும் ஓகஸ்ட் 19 வரை விலம்மாறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இன்று குலியாபிட்டி நீதவான் நீதிமன்றத்தால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது சந்தேக நபர்கள் மீதான விசாரணைகள் குறித்த முன்னேற்ற அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த குற்றவியல் புலனாய்வுத் துறை (சிஐடி) மேலும் விசாரணைகள் நடைபெற்று வருவதாகக் கூறினார்.

குறித்த சந்தேகநபர்களில் இருவர், 90 நாள் தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் விசாரிக்கப்படுவதாகவும், தடைசெய்யப்பட்ட தேசிய தெளஹீத் ஜமாத் குழுவின் உறுப்பினர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் சிஐடி மேலும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க