உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

அபிவிருத்தி பணிகளை பார்வையிட வடமாகாண ஆளுநர் வவுனியா விஜயம்!!

குளங்கள் கிராமங்களின் வளர்ச்சி எனும் தொனிப்பொருளில் காலநிலை மாற்றத்தினை தாக்குபிடிக்கும் ஒருங்கினைந்த நீர் முகாமைத்துவ கருத்திட்டத்தின் கீழ் வவுனியாவில் அபிவிருத்தி செய்யபட்டு வரும்  குளங்களை வடமாகாண ஆளுனர் சுரேன் இராகவன் இன்றயதினம் பார்வையிட்டிருந்தார்.
கடந்தவருடம் குறித்த திட்டத்தின் கீழ்  14 குளங்கள் வவுனியாவில் புணரமைப்பு செய்யபடுவதற்கு தெரிவுசெய்யபட்டு அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளபட்டுள்ள நிலையில் அதன் முன்னேற்பாடுகள் தொடர்பாக ஆராய்வதற்காகவே சுரேன்ராகவன் நேற்றயதினம் வவுனியாவிற்கு விஜயம்செய்திருந்தார்.
காலை 10 மணிக்கு வவுனியா மாவட்ட செயலகத்தில் அரச அதிபர் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடலை மேற்கொண்ட ஆளுனர் அதன் பின்னர் மதவுவைத்த குளத்திற்கு சென்று புணரமைப்பு பணிகளை பார்வையிட்டிருந்ததுடன் ஏனைய சில குளங்களையும் சென்று பார்வையிட்டிருந்தார்.
காலநிலை வேறுபாடுகள் மற்றும் தீவிர மாற்றங்களுக்கு தாக்குபிடித்தலை நோக்காக்கொண்டு உலர் வலயங்களில் வாழும் சிறு விவசாயிகளை பலப்படுத்தும் நோக்குடன் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் ஏற்பாட்டில் ஜக்கியநாடுகள் அபிவிருத்தி  நிகழ்சிதிட்டத்தின் நிதி உதவியுடன் குறித்த அபிவிருத்தி திட்டம் மேற்கொள்ளபட்டுவருகின்றமை குறிப்பிடதக்கது.
நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், மாவட்ட அரசஅதிபர் எம்.கனீபா,கமநல உதவி ஆணையாளர் இ.விஜயகுமார்,மற்றும் அரச உயர் அதிகாரிகள், கமக்காரர் அமைப்புகளை சேர்ந்தோர் என பலர் கலந்து கொண்டனர்

கருத்து தெரிவிக்க