உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு விசாரணை டிசம்பர் 2ஆம் திகதி!

தேசிய பல சேனா  அமைப்பின் பொது செயலாளர் வடரேக விஜித்த தேரர் கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் அத்துமீறி பிரவேசித்து அல் குர்ஆனை
அவமதித்தமை தொடர்பில் ஞானசார தேரருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஹத்தே ஞானசார தேரருக்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்கினை எதிர்வரும் டிசம்பர் மாதம் 2ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரட்ன இந்த உத்தரவை இன்று பிறப்பித்தார்.

இந்த நிலையில், குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அதனை எதிர்வரும் டிசம்பர் மாதம் ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு விசாரணை டிசம்பர் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க