உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

இரண்டு நபர்கள் மோதல் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

மஸ்கெலிய பொலிஸ் பிரிவிற்க்குற்பட்ட சாமிமலை கிலனுஜி தோட்டத்தில் நேற்று மாலை இடம்பெற்ற  வாய்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் ஒருவர் வெட்டு காயங்களுக்குள்ளாகி  மஸ்கெலிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது  தனக்கு சொந்தமான காய்கறி  தோட்டத்தில் போடப்பட்டிருந்த வேலியையும் மீறி மற்றைய நபர்  கூடுதலாக இடத்தை சுவீகரிக்க முற்பட்டதாலே இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

மேலும், வாக்குவாதம் கைகலப்பாக மாறவே ஆத்திரமடைந்த மற்றைய நபர் தன் வசம் இருந்த கூறிய ஆயுதத்தால் தாக்கியதில் பலத்த காயமடைந்ததாக தெரியவருகிறது.

சம்பவம் தொடர்பில்  கொடுக்கபட்ட முறைப்பாட்டுக்கமைய விசாரனை முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்து தெரிவிக்க