உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

பொதுஜன பெரமுன உறுப்பினர் ஒருவர் கைது

தம்புள்ளை மாநகர சபையின் உறுப்பினர் ஒருவர் இன்று அதிகாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நபர் ஒருவரை வாளால் வெட்டி காயப்படுத்தியமை தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தம்புள்ளை பொஹோரன்வெவ பகுதியை சேர்ந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெறமுண கட்சியின் மாநகர சபை உறுப்பினர் அநுர பண்டார என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அதேவேளை குறித்த தாக்குதலில் காயமடைந்த நபர் தம்புள்ளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட வாய்த்தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்புள்ளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க