பொன்மொழிகள்

அன்பு, ஆசை, உழைப்பு

  • சொல்வது யாருக்கும் எளிதான விஷயம். சொன்ன வாக்கை காப்பாற்றுவது அரிதானது.
  • அன்பை யாராலும் மறைக்க முடியாது. வேண்டியவர்களின் துன்பத்தைக் கண்டவுடன், அது தானாக வெளிப்பட்டு விடும்.
  • எவ்வளவு கிடைத்தாலும் அடங்காத தன்மையுள்ள ஆசையை ஒருவன் அடக்கப் பழகி விட்டால், அப்போதே அவன் பிறப்பில்லாத பேரின்ப நிலையைப் பெறுகிறான்.
  • உழைக்க உறுதி கொண்டவன் எதிலும் வெற்றி பெறுகின்றான். பொது வாழ்விலும் தனிமனித வாழ்விற்கும் உழைப்பே உயர்வு தரும். சோம்பல் ஒருவனை நரகத்திற்குத் தான் கொண்டு போய்ச் சேர்க்கும்.

கருத்து தெரிவிக்க