உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

ரணில், சஜித் இணைந்து அரசாங்கமொன்றை அமைக்க வேண்டும் – துசார

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் அமைச்சர் சஜித் பிரேமதாசவும் இணைந்து நிருவகிக்கும் அரசாங்கமொன்றை அமைக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் துசார இந்துனில் தெரிவித்தார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் பின்னாசன எம்.பி.க்களுக்கும் இடையில் நேற்றிரவு அலரி மாளிகையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

தற்பொழுது ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணியிலுள்ளவர்களையும், புதிய சக்திகளையும் ஒன்றிணைத்து ஒன்றாக நின்று செயற்படக் கூடிய கூட்டணியொன்றை உருவாக்க வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

கருத்து தெரிவிக்க