உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

இலங்கையை படம் எடுத்தனுப்பிய ராவணா செய்மதி!

இலங்கையை சேர்ந்த இரண்டு ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கிய செய்மதியான ராவணா, விண்வெளியில் இருந்து எடுத்த முதலாவது படம் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையினால் முதல்முறையாக தயாரிக்கப்பட்ட ராவணா செய்மதி, ஜப்பானிய நிறுவனம் ஒன்றினால் விண்ணுக்கு அனுப்பப்பட்டது.

இந்த செய்மதி தற்போது படங்களை அனுப்பத் தொடங்கியுள்ளது. இலங்கைத் தீவையும் அதனைச் சுற்றிய கடற்பகுதிகளையும் முதலில் படம் பிடித்துள்ளது ராவணா.

இலங்கை தனது செய்மதி மூலம் இலங்கைத் தீவை படம் பிடிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும்.

கருத்து தெரிவிக்க