உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்ய கூடும்!

வட மாகாணத்திலும் (மணித்தியாலத்துக்கு 45-50 கிலோ மீற்றர் வரையும்)வட கடற்பரப்புகளிலும் (மணித்தியாலத்துக்கு 55-65 கிலோ மீற்றர் வரையும்)காற்றுடன் கூடிய நிலையில் மேலும் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல்,சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலும் பல தடவைகள் சிறிதளவானமழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

கருத்து தெரிவிக்க