உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை இன்று!

நாடெங்கிலும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை இன்று இடம்பெறவுள்ளது.

காலை 9.30ற்கு ஆரம்பமாகி நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடையும்.

பரீட்சை நடைபெறும் காலப்பகுதிக்குள் பரீட்சை மத்திய நிலையங்களாகப் பயன்படுத்தப்படும் பாடசாலை வளவில் அனுமதியின்றி எவரும் பிரவேசிக்க முடியாது.

இதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க