உள்நாட்டு செய்திகள்

‘பிரதான விசாரணையின் இறுதி நாளில் பிரதமர் சாட்சியம்’

நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்க பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 6ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு அவர் தெரிவிக்குழுவில் முன்னிலையாகவுள்ளார்.

அவருடன் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன, அமைச்சர்களான சாகல ரத்நாயக மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவுக்குழுவின் உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

பிரதி சபாநாயகர் தலைமையிலான விசேட தெரிவுக்குழுவின் விசாரணைகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளன.

எதிர்வரும் 6ஆம் திகதி கூடவுள்ள நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் அமர்வுகளுடன் பிரதான விசாரணைகள் அனைத்தும் முடிவுக்கு வரவுள்ளன.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக குறித்த குழு அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க