உள்நாட்டு செய்திகள்புதியவை

800,000 பெறுமதியான சிகரெட்டுகளை கடத்தியவர்கள் கைது

இன்று (ஆகஸ்ட் 3) நாட்டிற்குள் 38,000 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்த முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

துபாயில் இருந்து நாடு திரும்பி சந்தேக நபர்களை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் கைது செய்தனர்.

சந்தேக நபர்கள் 33 மற்றும் 45 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிகரெட்டுகளின் மதிப்பு சுமார் 800,000 ரூபாய் என சுங்க அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.

இரு நபர்களின் பொருட்கள் அடங்கிய பெட்டிக்குள் சிகரெட் குச்சிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன என குறிப்பிடப்படுகிறது.

கருத்து தெரிவிக்க