உள்நாட்டு செய்திகள்புதியவை

தலை பிறை தென்பட்டது: 12 ஆம் திகதி ஹஜ்ஜுப்பெருநாள்

இலங்கையில் தலை பிறை தென்பட்டுள்ளதால் எதிர்வரும் 12 ஆம் திகதி புனித ஹஜ் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது.

நேற்றைய தினம் (02) கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்ற பிறைக்குழு மாநாட்டில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஹிஜ்ரி 1440 துல்ஹஜ் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டின் பல பாகங்களில் தென்பட்டது.

இதனால், எதிர்வரும் 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அரபா தினத்தை அனுஷ்டிப்பது என்றும் திங்கட்கிழமை 12 ஆம் திகதி இலங்கை வாழ் முஸ்லிம்கள் புனித ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடுவார்கள் என்றும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க