உள்நாட்டு செய்திகள்புதியவை

சிறுவனின் அறுவை சிகிச்சைக்கு உதவி கோரப்பட்டுள்ளது

கெரவலபிட்டிய வத்தளையைச் சேர்ந்த சசிந்து தினுசர என்ற 7 வயதான சிறுவன் கடந்த இரண்டு வருடகாலமாக கடுமையான இரத்தப்புற்று நோயால் பாதிக்கப்பட்டு மகரகமை அபேக்ஸ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவருக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியர் சஞ்சீவ குணசேகரவின் அறிவுறுத்தலின் படி அவரின் உயிரைக் காப்பாற்ற உடனடியான எலும்பு மச்சை மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.

இந்த அறுவை சிகிச்சையானது இன்னும் 12 நாட்களில் இந்தியாவின் அப்பலோ வைததியசாலையில் மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்த சத்திரசிகிச்சையின் செலவாக இலங்கை மதிப்பில் 12 மில்லியன்
தேவைப்படுகிறது. எனினும் இப்பெருந்தொகை பணத்தை 12 நாட்களில் திரட்டமுடியாத காரணத்தினால் நலன்விரும்பிகளின் உதவி கோரப்படுகிறது.

தொடர்புகளுக்கு: எச்.ஏ.எல்.பி. பெரேரா, மக்கள் வங்கி கணக்கு இலக்கம் 222100160977068 அல்லது தந்தையார் லினுஸ் பிரியந்த பெரேரா 0729518325 ,0112947854

கருத்து தெரிவிக்க