உள்நாட்டு செய்திகள்

சபாநாயகராகிறார் லக்‌ஷ்மன் கிரியல்ல?

அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியல்லவை சபாநாயகர் பதவிக்கு நியமிப்பதற்கான ஏற்பாடு இடம்பெற்றுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் உதயமாகவுள்ள புதிய அரசியல் கூட்டணியின் தலைவராக கருஜயசூரிய நியமிக்கப்படலாம் என்றும், அவரே ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கவுள்ளார் என்றும் கூறப்படுகின்றது.

இதற்காக சபாநாயகர் பதவியை கரு ஜயசூரிய விரைவில் இராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனால் ஏற்படும் பதவி வெற்றிடத்துக்கே தற்போது சபை முதல்வராக செயற்படும் லக்‌ஷ்மன் கிரியல்லவை நியமிப்பது தொடர்பில் ஆலோசனை நடத்தப்பட்டுவருகிறது.

எனினும், மத்திய அதிவேக நெடுஞ்சாலை பணிகள் நிறைவடையும்வரை லக்‌ஷ்மன் கிரியல்ல அமைச்சரவையில் அங்கம் வகிக்க வேண்டும் என ஒரு தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

கருத்து தெரிவிக்க