உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

இன்று முதல் வடக்கிற்கான புதிய தொடரூந்து சேவைகள்

காங்கேசன்துறை முதல் கொழும்பு வரையான இரண்டு புதிய தொடரூந்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இன்று (வெள்ளிக்கிழமை) முதல் காலை மற்றும் இரவு வேளைகளில் குறித்த சேவைகள் இடம்பெறவுள்ளதாக யாழ். தொடரூந்து நிலையத்தின் தலைமை அதிகாரி ரி.பிரதீபன் தெரிவித்தார்.

யாழிலிருந்து இன்று காலை 06.25 மணிக்கு புறப்பட்ட 4082 இலக்க தொடரூந்து காலை 07.43 மணிக்கு கிளிநொச்சியையும், வவுனியாவை 09.02 மணிக்கும் சென்றடைந்து மாலை 4 மணிக்கு கொழும்பை சென்றடையும்.

இரண்டாவது தொடரூந்து சேவை மாலை 5.40 மணிக்கு காங்கேசன்துறையிலிருந்து புறப்பட்டு 6 மணியளவில் மணிக்கு யாழ். தொடரூந்து நிலையத்தை சென்றடையும். அங்கிருந்து 6.40 மணிக்கு கொழும்பு நோக்கிப் புறப்பட்டு அதிகாலை 4 மணிக்கு கொழும்பை சென்றடையும் என குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க