உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகிய பேருந்து!

டயகம நகரிலிருந்து தலவாக்கலை பகுதியை நோக்கி சென்ற பேருந்து ஒன்று இன்றைய தினம் வீதி விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

அதிகாலை 5.20மணியளவில் டயகமவிலிருந்து தலவாக்கலை நோக்கி சென்ற பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

பேருந்து சென்று கொண்டிருந்த சமயம் சாரதி இருக்கைக்கு அருகில் இருந்த கதவு திடிரென திறந்தமையால் அதனை மூட முற்பட்டபோது பாதையிலிருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

பயணிகளுக்கோ அல்லது சாரதிக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க