உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

‘முத்திரை கண்காட்சியும் சந்தையும் இன்று தபால் தலைமையகத்தில்’

தபால் திணைக்களத்தின் முத்திரை கண்காட்சியும் சந்தையும் இன்று தபால் தலைமையகத்தில் இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை இந்த கண்காட்சி இடம்பெறும் என்று தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரட்ன தெரிவித்துள்ளார்.

தபால் திணைக்களத்தின் முத்திரை பணியகம் ஒழுங்கு செய்துள்ள இந்த கண்காட்சியில் 20 இற்கும் மேற்பட்ட முன்னணி வர்த்தகர்கள் பங்கேற்கவுள்ளனர்.

முத்திரைகளை கொள்வனவு செய்வதற்கும் காட்சிப்படுத்துவதற்கும் அங்கு சந்தர்ப்பம் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

தமது உருவப்படத்துடன் முத்திரை ஒன்றை உருவாக்கிக் கொள்வதற்கான சந்தர்ப்பம் அங்கு காணப்படுவதுடன் சில வினாடிகளின் இந்த முத்திரைகளினை பெற்றுக்கொள்வதற்கும் முத்திரை பணியகம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரட்ன தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க