உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

அலி ரொஷான் உள்ளிட்ட 7 பேருக்கு பிணை

சட்ட விரோதமான யானை கடத்தலில் ஈடுபட்ட அலி ரொஷான், என அறியப்படும் நிராஜ் ரொஷான் உள்ளிட்ட 7 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு நீதிபதிகளான விக்கும் களுஆராய்ச்சி, தம்மிக கணேபொல மற்றும் அடிய படபெந்தி ஆகிய 3 நீதிபதிகள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இன்றைய வழக்கு விசாரணையின் போது சந்தேக நபர்களுக்கு பிணை வழங்குவதற்கு சட்டமா அதிபர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் குற்றவளிகளை தலா 25,000 ரூபா ரொக்கப் பிணை மற்றும் 50 இலட்சம் ரூபா சரீரப்பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க