உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

கேரள கஞ்சாவுடன் இருவர் கைது!

கல்பிட்டிய, குடாவ பிரதேசத்தில் 20.120 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்களை பொலிஸ் போதைப்பொருள் பணியகத்துடன் இணைந்து கடற்படை வீரர்கள் கைது செய்துள்ளனர்.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளைக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீரர்களுடன் பொலிஸ் போதைப்பொருள் பணியகத்துடன் இணைக்கப்பட்ட அதிகாரிகள் இணைந்து வாகனம் ஒன்றை சோதனை செய்தபோது அங்கு 10 பொதிகள் சந்தேகத்திற்கிடமாக இருந்த இந்த கஞ்சா தொகை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கல்பிட்டிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

கருத்து தெரிவிக்க