உள்நாட்டு செய்திகள்புதியவை

சுவிட்சர்லாந்து தூதரகத்தில் விமானப்படை அதிகாரி தற்கொலை முயற்சி

கொழும்பு தர்ஸ்டன் வீதியில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் உத்தியோகபூர்வ இல்லத்தின் முன் கடமையில் இருந்த விமானப்படை அதிகாரி ஒருவர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இன்று மதியம் 1.15 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கம்பளையைச் சேர்ந்த குறித்த அதிகாரி கொழும்பு தேசிய வைத்தியசலாயில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தின் பின்னணி இன்னும் கண்டறியப்படவில்லை என குறிப்பிடப்படுகிறது.

காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க