உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

ஹெரோயினுடன் பெண் ஒருவர் கைது!

அங்கொட பகுதியில் ஹெரோயினுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முல்லேரியா பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (30) மாலை 5.20 மணியளவில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணிடம் இருந்து 2 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாரஹேன்பிட்ட பகுதியை சேர்ந்த 27 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க