உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

சமுர்த்தி வழங்குவதற்கான இரண்டாம் கட்ட நடவடிக்கை ஆரம்பம்!

சமுர்த்தி வழங்குவதற்கான இரண்டாம் கட்டத்திற்காக விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்கென இதுவரை மூன்றரை இலட்சம் அளவுக்கு விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் தயா கமகே தெரிவித்தார்.

கிராமிய மட்டத்தில் அமைக்கப்படுகின்ற குழுக்களுடாக குறித்த விண்ணப்பங்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு பின்னர் சமுர்த்தி நிவாரணம் வழங்கப்படுமென அமைச்சர் தெரிவித்தார்.

சமுர்த்தி வேலைத்திட்டத்தின் முதற்கட்டத்தில் 6 இலட்சம் பேருக்கு சமுர்த்தி நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்நிலையிலேயே இதன் இரண்டாம் கட்டம் ஆரம்பமாகவுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை சமுர்த்தி பயனாளிகளின் மேம்பாட்டுக்காக மேலும் பல விசேட வேலைத்திட்டங்கள் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தயா கமகே தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க