உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

பெரியகட்டு தூய அந்தோனியார் ஆலயத்தின் திருவிழா ஓகஸ்டில் நடைபெறும்!

மன்னார் மறைமாவட்டம் செட்டிக்குளம் பெரியகட்டு தூய அந்தோனியார் ஆலயத்தின் திருவிழா திருப்பலி எதிர்வரும் ஓகஸ்ட மாதம் 4 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிக்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டே ஆண்டகை தலைமையில் கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.

பெரிய கட்டு தூய அந்தோனியார் ஆலயத்தின் திருவிழா கடந்த 26 ஆம் திகதி மாலை பங்குத்தந்தை எஸ்.செபமாலை அடிகளார் தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

அதனைத் தொடர்ந்து நவ நாள் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு வருகின்றது.

எதிர்வரும் 1 ஆம் திகதி முதல் 3 ஆம் திகதி வரை மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை இந்தியாவில் இருந்து வருகை தரும் அருட்தந்தை இக்னேசியஸ் அடிகளாரின் சிறப்பு வழிபாடுகள் மற்றும் குணமாக்கல் வழிபாடுகளும் இடம் பெறும். என செட்டிக்குளம் பங்குத்தந்தை எஸ்.செபமாலை அடிகளார் மேலும் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க