உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

சிட்னி-கொழும்புக்கு நேரடி விமான சேவை ஆரம்பிக்குமாறு கோரிக்கை!

சிட்னி மற்றும் கொழும்புக்கு இடையே நேரடி பயணிகள் விமான சேவை ஆரம்பிக்கப்பட்டால் அதிகளவான அவுஸ்திரேலிய சுற்றுலா பயணிகள் இலங்கை வருவார்கள் என சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவுஸ்திரேலிய சுற்றுலா பயணிகள் தமது விடுமுறையினை செலவிடுவதற்காக பாலி தீவிற்கு செல்கின்றனர்.

பாலி தீவைவிட இலங்கையில் பல இடங்கள் சுற்றுலாப் பயணிகளை கவரும் பிரதேசங்களாக உள்ளதாக இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அவுஸ்திரேலிய உயர்மட்ட சுற்றுலா துறையை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க