உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 15 உழவியந்திரங்கள், சாரதிகளும் கைது!

முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மைய நாட்களாக சட்டவிரோத மணல் அகழ்வு பாரிய அளவில் இடம்பெற்று வருவதோடு காடழிப்பும் இடம்பெறுவதாக பல்வேறு ஊடகங்களும் சுட்டிக்காட்டி வந்துள்ளன.
இந்த சட்டவிரோத நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் பொலிஸாரும் கண்டு கொள்ளவில்லை எனவும் மக்கள் குற்றம் சுமத்தி வந்தனர்
இந்நிலையில் இந்த குற்றச்சாட்டுக்களை இல்லாதொழிக்கும் முகமாக புதுக்குடியிருப்பு பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை நேற்று மேட்கொண்டுள்ளனர்.

இதன்போது புதுக்குடியிருப்பில் சட்டவிரோதமாக மணல் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்ட 15 உழவியந்திரங்களை நேற்று புதுக்குடியிருப்பு பொலீசார் கைதுசெய்துள்ளார்கள்.

புதுக்குடியிருப்பு பொலீஸ் பரிவிற்கு உட்பட்ட நஞ்சுண்டான் குளப்பகுதியில் நேற்று மாலை சட்டத்திற்கு முரணான வகையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட 15 உழவு இயந்திரங்களையும் அதன் சாரதிகளையும் புதுக்குடியிருப்பு பொலீசார் கைதுசெய்துள்ளார்கள்.

இவர்களை இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலீசார் தெரிவித்துள்ளார்கள்’.

இந்நிலையில் ஒவ்வொருநாளும் பொலிசார் இவ்வாறான கண்காணிப்பு நடவடிக்கைகளையும் கைதுகளையும் செய்வார்கள் எனில் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த முடியும் எனவும் ஊடகங்களில் செய்தி வந்ததற்காக இன்று பாரிய அளவில் கைது செய்து இருப்பதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே பொலீசார் தொடர்ச்சியாக இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் முல்லைத்தீவின் இயற்கை வளங்கள் அளிக்கப்படுவதில்லை தடுத்து நிறுத்தலாம் எனவும் மக்கள் கருத்து வெளியிடுகின்றனர்.

 

கருத்து தெரிவிக்க