உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

சிறப்பாக சேவையாற்றிய பொலிசாரை கௌரவிக்கும் நிகழ்வு இன்று!

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள 7 பொலிஸ் நிலையங்களிலும் சிறப்பாக சேவையாற்றிய பொலிஸாரை கௌரவிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

குறித்த நிகழ்வு இன்று பிற்பகல் 2 மணியளவில் கிளிநொச்சி கூட்டுறுவு சபை மண்டபத்தில் ஆரம்மாகியது.

குறித்த நிகழ்வில் வடமாகாணத்திற்கு பொறுப்பாக உள்ள சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் விஜயகுணரட்ண பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கணேசநாதன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது கிளிநொச்சி மாவட்டத்தில் குற்ற செயல்களை கட்டுப்படுத்துவதற்காக சிறப்பாக செயற்பட்ட பொலிஸார் கௌரவிக்கப்பட்டனர்.

கருத்து தெரிவிக்க