உள்நாட்டு செய்திகள்புதியவை

மாவனல்லை புத்தர் சிலை உடைப்பு: 15 பேருக்கு விளக்கமறியல்

மாவனல்லை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் புத்தர் சிலைகளுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 15 சந்தேக நபர்கள் விலம்மாறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இன்று குறித்த சந்தேக நபர்கள் மாவனல்லை நீதவான் நீதிமன்றில் மாவட்ட நீதிபதி உபுல் ராஜகருண முன் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் ஓகஸ்ட் 8 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக 14 பேர் கைது முன்னதாக செய்யப்பட்டுள்ளனர். மற்றொரு நபர் இன்று கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

மேலும், பயங்கரவாதிகளை கொண்டு சென்றதாக சந்தேகிக்கப்படும் இரண்டு வேன்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கருத்து தெரிவிக்க