உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

இலங்கை வந்த பெண்; ஐரோப்பிய நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

இலங்கையின் தென்பகுதியில் உள்ள பெந்தொட்ட பகுதியில் அமைந்திருக்கின்ற விருந்தகம் ஒன்றில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் பிரித்தானிய பெண் ஐரோப்பிய நீதிமன்றத்தில் மனுவை தாக்கல் செய்திருக்கிறார்.

குறித்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் விசாரணை செய்ய அனுமதி வழங்கியிருக்கின்றது.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் குறித்த பெண் பெந்தொட்ட விருந்தகம் ஒன்றில் தங்கியிருந்தபோது அங்கு பணியாற்றிய ஒரு பொறியியலாளர் ஒருவரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தாம் கர்ப்பிணி ஆனதாக அப்பெண் தெரிவித்திருக்கின்றார்.

இந்த நிலையில் தமக்கு நீதி வேண்டும் என கோரி அந்தப் பெண் மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார்

இதேவேளை தமது இந்த இலங்கை பயணத்தை ஏற்பாடு செய்த நிறுவனம் தமக்கு 29 ஆயிரம் பௌன்ஸ்களை தமக்கு நட்ட ஈடாக வழங்க வேண்டும் என்று குறித்த பெண் தனது மனுவில் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

கருத்து தெரிவிக்க