உள்நாட்டு செய்திகள்

வவுனியாவில் தீக்கிரையானது வீடு!

வவுனியா பறன்நட்டகல் கிராமத்தில் வீடொன்றில் பற்றிய தீயை நகரசபையின் தீயணைப்பு படையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தற்காலிக வீடொன்றின் அனைவரும் வெளியில் சென்றிருந்த சமயம் மாலை 4.30 மணியளவில் திடீரென தீ ஏற்பட்டுள்ளது.
தீ பரவுவதை அவதானித்த அயலவர்கள் உடனடியாக தீயை கடடுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தபோதிலும் அது சாத்தியப்படாத நிலையில் வவுனியா நகரசபையின் தீயணைப்பு படையினருக்கு தகவல் வழங்கப்பட்டு அவர்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இத் தீ விபத்தினால் வீட்டில் உள்ள உடமைகள் அனைத்தும் சேதமடைந்துள்ளன.

கருத்து தெரிவிக்க