உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

காணாமல் போன துப்பாக்கிகள் தொடர்பான விசாரணை CID யிடம் ஒப்படைப்பு!

பாணந்துறை வடக்கு காவல் நிலையத்தில் காணாமல் போன இரண்டு டி-56 ரக துப்பாக்கிகள் தொடர்பான விசாரணைகள் குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக பாணந்துறை வடக்கு காவல் நிலைய பொறுப்பாளர் (ஓ.ஐ.சி) இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க