உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

என்டர்பிறைஸ் ஸ்ரீலங்கா திட்டத்தின் இரண்டாவது கண்காட்சி நாளை ஆரம்பம்!

ரஜரட்ட பிரதேசங்களில் இருந்து 20 ஆயிரம் தொழில் முயற்சியாளர்களை உருவாக்கும் என்டர்பிறைஸ் ஸ்ரீலங்கா திட்டத்தின் இரண்டாவது கண்காட்சி நாளை ஆரம்பமாகவுள்ளது.

புதிய தொழில் முயற்சியாளர்களை உருவாக்குவதே கண்காட்சியின் பிரதான நோக்கமாகும் என ராஜாங்க அமைச்சர் எரான் விக்கிரம ரத்ன தெரிவித்துள்ளார்.

2018ஆம் ஆண்டில் முதலாவது கண்காட்சி மொனறாகலையில் இடம்பெற்றது.

இதன் மூலம் மொனறாகலை மாவட்ட மக்களுக்கு பல பயன்கள் கிடைக்கப்பெற்றன.

இம்முறை கண்காட்சி அனுராதபுரம் வலிசிங்ஹ ஹரிஸ்சந்திர விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

என்டர்பிறைஸ் ஸ்ரீலங்கா முன்னேற்றத்தின் முன்னோடி என்பது இம்முறை தொனிப்பொருளாகும்.

நாட்டில் உள்ள தொழிற்படையின் விகிதத்திற்கு ஏற்ப தொழில் முயற்சியாளர்களின் விகிதத்தை அதிகரிப்பதும் அரசாங்கத்தின் நோக்கமாகும் என்று ராஜாங்க அமைச்சர் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க