உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

கடந்த 24 மணித்தியாலங்களில் 217 சாரதிகள் கைது!

இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 217 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 5ம் திகதி முதல் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் இதுதொடர்பான சுற்றிவளைப்புக்களில் இதுவரை மதுபோதையில் வாகனம் செலுத்திய 4 ஆயிரத்து 841 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் தொடர்ந்தும் சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்படுமென பொலிஸ் ஊடகப்பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க