உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

சீதாவாக்க அபிவிருத்தி வேலைத்திட்டம்; நிகழ்வு இன்று பிரதமர் தலைமையில்..

சீதாவாக்க அபிவிருத்தி செயற்றிட்டங்களை திறந்து வைக்கும் நிகழ்வு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று நடைபெறவுள்ளது.

பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தியமைச்சு இந்தச் செயற்றிட்டங்களை முன்னெடுத்துள்ளது.

நகர அபிவிருத்தி அதிகார சபையின் நிதி ஒதுக்கீட்டிற்கு அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன் கீழ் பாதுக்க நகர மைதானம், ஹங்வெல்ல வாராந்த சந்தை, மிரிஸ்வத்த முன்டிகல பாதை என்பன இன்று பிற்பகல் திறந்து வைக்கப்படவுள்ளன.

அதேபோல் அவிசாவளை பொது சந்தைத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டு விழாவும் பிரதமர் தலைமையில் இடம்பெறவுள்ளது.

சாலாவ நகரின் அபிவிருத்திப் பணிகள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளதோடு, மக்கள் சந்திப்பொன்றும் பிரதமர் தலைமையில் இடம்பெறவுள்ளது.

கருத்து தெரிவிக்க