உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

முல்லைத்தீவிலும் தபால் ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பு போராட்டம்

ஒன்றிணைந்த தபால் சேவைகள் தொழிற்சங்கம் இன்று நள்ளிரவு முதல் சுகவீன விடுமுறை  போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதான் காரணமாக முல்லைத்தீவில் தபால் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மாவடடத்தின் தபாலகங்கள் பூட்டப்பட்ட நிலையில் காணப்படுகின்றன .

சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இவ்வாறு வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக குறித்த தொழிற்சங்கம் நேற்று தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் 24 மணி நேரம்  அனைத்து தபால் ஊழியர்களும் சுகவீன விடுமுறை எடுக்கவுள்ளதாக ஒன்றிணைந்த தபால் சேவைகள் தொழிற்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சித்தக பண்டார நேற்று தெரிவித்திருந்தார்

அதனடிப்படையில் இன்று குறித்த போராடடம் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது

கருத்து தெரிவிக்க