உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

பூஜித், ஹேமசிறி ஆகியோருக்கு எதிரான வழக்கு ஒத்தி வைப்பு

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள காவற்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிரான வழக்கு விசாரணை ஒக்டோபர் மாதம் 03 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் இந்த இருவருக்கும் எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களை தவிர்க்க நடவடிக்கை எடுக்காடுமை, மனித படுகொலைகளுக்கு உதவியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க