உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

உயிரிழந்தவரின் சடலத்தை பார்க்க சென்றோரும் கைது

யாழ்ப்பாணத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞனின் சடலத்தை பார்க்க சென்ற நால்வரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

யாழ் போதான வைத்தியசாலைக்கு கொடிகாமத்தை சேர்ந்த குறித்த நால்வரும் வந்த நிலையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த நபருடன் கைது செய்யப்பட்டோர் தொலைபேசி வாயிலாக இறுதியாக பேசியுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

மானிப்பாயில் உள்ள ஒரு சோதனைச் சாவடியில் நிறுத்தத் தவறியதால், மோட்டார் சைக்கிள்களில் வந்த இளைஞர்கள் குழு மீது நேற்றிரவு காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது.அதில் ஒருவர் உயிரிழந்தார்.

இவர்கள் ‘ஆவா குழுவின் ’ அங்கத்தவர்கள் என சந்தேகிப்பதாகவும், அவர்களிடம் வாள்கள் இருந்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

கருத்து தெரிவிக்க