உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்புதியவை

மட்டக்களப்பு வீடொன்றில் ஒருவர் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

வயோதிபரான கணேசமூர்த்தி சாமித்தம்பி (74) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் சுமார் 10 வருட காலமாக தனிமையில் வசித்து வந்ததாக கூறப்படுகின்றது.

அருகில் வசிக்கும் குறித்த வயோதிபரின் மகள் அவரை தேடியபோது அவர் கழிவறையில் இறந்த நிலையில் கிடந்ததாக காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார்.

இவரது உடலில் சிறு காயங்கள் காணப்படுவதால் இவரது உயிரிழப்பு குறித்து உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இது குறித்த மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க