உள்நாட்டு செய்திகள்புதியவை

தொழிற்கல்வியை பயிலும் மாணவர்களுக்கு விசேட கொடுப்பனவு

உயர் தரத்தில் தொழிற்கல்வியை பயிலும் மாணவர்களுக்கு பயிற்சி பெறும் காலம் வரை நாளாந்தம் 500 ரூபா கொடுப்பனவை வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் எவ்வாறு இருப்பினும் தொழல் பாடத்துறையின் கீழ் உயர்தரம் வரை செல்வதற்கு அனைத்து மாணவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த வேலைத்திட்டம் அனைத்து மாணவர்களுக்கும் 13 வருட பாடசாலை கல்வியை வழங்கும் முகமாக கல்வி அமைச்சர் அகிலாவிராஜ் காரியவசத்தின் வழிகாட்டலில் 2017 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

இதன் மூலம் தொழில் துறைக்கான 26 பாடநெறிகளில் விரும்பிய 3 பாடத்தை தேர்ந்தெடுப்பதற்கு அனைத்து மாணவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க