உள்நாட்டு செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

அமைச்சரவையில் தோட்டத் தொழிலாளர்களின் ஊதிய விவகாரம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஊதிய விவகாரம் தொடர்பான அமைச்சரவை துணைக்குழுவின் இறுதி அறிக்கை தொடர்பான விடயங்கள் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தின் போது கவனத்தில் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுவாக ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் கூட்டம் இன்று (ஜூலை 19) மாலை 6 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

அத்துடன், தற்போதைய சீரற்ற வானிலை நிலைமை குறித்தும் விவாதங்கள் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க