உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் தீர்த்தக்குளம் தூய்மையாக்கப்பட்டது

இலங்கையில் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற இந்து ஆலயங்களில் ஒன்றான மட்டக்களப்பு ‘ மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த திருவழா எதிர்வரும் 22ம் திகதி ஆரம்பமாகி 31ம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ளது.

ஆலய தீர்த்தோற்சவத்தையொட்டி நாடெங்கிலும் இருந்து வரும் இலட்சக்கணக்கான பக்தர்கள் தீர்த்தமாடி பக்திக்கடன் கழிக்கின்ற தீர்த்தக்குளம் மட்டக்களப்பு மாநகர சபையினால் இன்று தூய்மைப்படுத்தப்பட்டதுடன் ஆலய சுற்று வட்டமும் மாநகர சபை ஊழியர்களினால் தூய்மைப்படுத்தப்பட்டது.

மட்டக்களப்பு மாநநகர மேயர் தியாகராசா சரவணபவன் தலைமையில் நடைபெற்ற சிரமதான பணிகளில் பிரதி மேயர் மாநகர சபை உறுப்பினர்கள், ஊழியர்கள் உட்பட பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்து கொண்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க