உள்நாட்டு செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்முக்கிய செய்திகள்

ஆக்கரபத்தனை மாணவியை தேடும் பணிகள் இடைநிறுத்தம்

தலவாக்கலை ஆக்கரப்பத்தனை ஆற்றில் நீரால் இழுத்துச்செல்லப்பட்ட மாணவி ஒருவரை தேடும் பணிகள் நாளை காலை தொடரவுள்ளன.

இன்று பிற்பகல் அளவில் பாடசாலையை விட்டு வீட்டுக்கு செல்லும் வழியில் ஆற்றை கடக்க முயன்றபோது இரண்டு மாணவிகள் ஆற்றுநீரினால் இழுத்துச்செல்லப்பட்டனர்.

இவர்களில் ஒருவர் இறந்தநிலையில் மீட்கப்பட்டார்.

மற்றும் ஒரு மாணவியை தேடும் பணிகள் இன்று மாலை வரை முன்னெடுக்கப்பட்டன.

எனினும் மாலை 6 மணிக்கு பின்னர் இந்த பணிகள் நிறுத்தப்பட்டன.

டொரிங்டன் தோட்டத்தை 10 மற்றும் 12 வயதான மாணவிகளே ஆற்றில் இழுத்துச்செல்லப்பட்டவர்களாவர்.

வுழமையாக இந்த ஆற்றை கடந்தே மாணவ மாணவிகள் தமது ஊருக்கு செல்வது வழக்கம்.

எனினும் இன்று ஆற்றில் வழமைக்கு மாறாக அதிக நீர் பெருக்கெடுத்தபோதே மாணவிகள் இருவரும் அதில் அகப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க