உள்நாட்டு செய்திகள்புதியவை

இயந்திரப் படகு விபத்து: மீட்பு பணி தீவிரம்

காலி துறைமுகப் பகுதியில் சிறிய வகை இயந்திரப் படகு ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ள நிலையில் படகில் இருந்தவர்களை மீட்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக குறித்த படகு விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள படையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தினால் ஏற்பட்டுள்ள சேதம் தொடர்பான விபரங்கள் உடனடியாக வெளியாகவில்லை.

கருத்து தெரிவிக்க